லாரியில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

Loading

வேலூர் ஜூன் 27

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் வட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் ஆலோசனைப்படி நுகர்பொருள் பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் மற்றும் குற்ற புலனாய்வு துறை ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய குழு பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்ல இருந்த வாகனத்தை மடக்கி பிடித்தனர்.

அப்போது வாகனத்தில் இருந்த லாரி ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் அதிலிருந்து மூன்று டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வேலூர் நுகர் பொருள் வாணிப கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைக்கப்பட்டனர் மேலும் இது தொடர்பாக பேர்ணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *