திருவள்ளூரில் புலம் பெயர்ந்த செங்கல் சேம்பர் தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் : கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி வழங்கினார்
திருவள்ளூர் ஜூன் 18 : தமிழகத்திலேயே அதிகமான செங்கல் சேம்பர்களை கொண்ட மாவட்டம் திருவள்ளூர் ஆகும். இங்கு சொந்த மாவட்டங்களிலிருந்து ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை குடிபெயர்ந்து செங்கல் உற்பத்தி பணி செய்வதற்கு தொழிலாளர்கள் வருகின்றனர்.
இத்தகைய தொழிலாளர்களுக்கு அங்கன்வாடி சேவைகள், சுகாதார சேவைகள், பள்ளி கல்வி, அரசின் நல திட்டங்களை குறித்தும் அசிம் பிரேம்ஜி பவுண்டேசன் உதவியுடன் அரசு துறையுடன் இணைந்து திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் செயல்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள செங்கல் சேம்பர் தொழிலாளர் குடும்பங்களுக்கு திருவள்ளுர் கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி ஆலோசனை பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், பூந்தமல்லி, எல்லாபுரம், வில்லிவாக்கம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம், பூண்டி, கடம்பத்தூர் ஆகிய ஒன்றியங்களில் செங்கல் சேம்பர் குடும்பங்களுக்கு குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் 2400 குடும்பங்களுக்கு அரிசி, துவரம்பருப்பு, வேர்க்கடலை, கருப்பு மூக்கடலை, சமையல் எண்ணெய், மாசாலா பவுடர், பச்சை பயறு அடங்கிய உணவு தொகுப்புடன்; சோப், முககவசம் ஆகியவைகளையும் அசிம் பிரேம்ஜி பவுண்டேசன் உதவியுடன் வழங்கப்பட்டது.
அதன்படி கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்து உணவு பொருள் தொகுப்பினை திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள கிளாம்பாக்கம் ஏ.எல்.கே செங்கல் சேம்பரில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி தொழிலாளர்களுக்கு வழங்கினார். மேலும் கொரோனா மற்றும் கோவிட் தடுப்பூசியின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இதில் வருவாய் ஆய்வாளர் டில்லிபாபு, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், கிளாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சொக்கலிங்கம், ஊராட்சி மன்ற துணை தலைவர் ரவி, ஐ.ஆர்.சி.டி.எஸ் கள ஒருங்கிணைப்பாளர்கள் மரிய ஆனந்தராஜ்,பழனி, மணி,ராஜேஷ், சார்லஸ், ராய் ஆகியோர் கலந்து கொண்டனர்.