வேலூர் மாவட்ட காவல்துறை மற்றும் இந்திய துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு.

Loading

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர், இந்திய துணை இராணுவ படையினர் கொடி அணிவகுப்பு
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட காகிதப்பட்டறை சைதாப்பேட்டை மற்றும் கொணவட்டம் ஆகிய பகுதியில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், தலைமையில் காவல்துறையினர் மற்றும் இந்திய இராணுவ துணை பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. உடன் வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், உடன் இருந்தார்.

இந்த கொடி அணிவகுப்பு காகிதப்பட்டறை சைதாப்பேட்டை மற்றும் வேலூர் பழைய பேருந்து நிலையம் வழியாக கொணவட்டம் பகுதியில் நிறைவடைந்தது.சட்டமன்றத் தேர்தலையொட்டி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள், கலவரங்கள்,சமூக விரோத செயல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த காவல்துறை எந்த நேரமும் விழிப்புடன் செயல்படுவதையும், பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் இக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *