கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்த நடிகர் சிவகார்த்திகேயன்…

Loading

சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்.

சென்னை: தமிழக அரசு வழங்கிய கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழக அரசின் 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான கலை மாமணி விருதுகள் சென்னை தலைமை செயலகத்தில் வழங்கப்பட்டது. இவ்விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுக் கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், தமிழக மக்களுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி என கூறி இருந்தார்.அத்துடன் இல்லாமல் வீட்டுக்கு சென்ற சிவகார்த்திகேயன், தாயின் காலில் நெடுஞ்சானாக விழுந்து வணங்கி தான் பெற்ற கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பித்தார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி! தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *