தமிழ் நாட்டில் உள்ள இரண்டு அமாவாசைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் ஒட்டன்சத்திரத்தில் நடந்த திமுக கூட்டத்தில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

Loading

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் திமுகவின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார் இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர்
அப்போது அவர் பேசுகையில் நான் இதுவரை 62 தொகுதிகளில் பிரசாரம் செய்தேன் ஆனால் சத்தியமாக இந்த மாதிரி ஒரு எழுச்சியான கூட்டத்தை காண முடியவில்லை இங்கு உள்ள உங்கள் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி ஒரு சட்டமன்ற உறுப்பினர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளவர் கடந்த முறை 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்

தொடர்ந்து 25 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் இந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி வெற்றி பெற செய்ய நீங்கள் தயாராக இருங்கள் என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் ஒவ்வொரு அமைச்சருக்கும் பட்டப்பெயர் வைத்து பேசினார் அப்போது முதலமைச்சரை எடுபிடி எடப்பாடி பழனிச்சாமி என்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் டயர் நக்கி என்றும் இதை நான் சொல்லவில்லை பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கூறினார் என்று மிகவும் கிண்டலடித்து பேசினார்

மேலும் அவர் கழக ஆட்சி வந்தவுடன் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு பரம்பிக்குளம் மற்றும் ஆழியாறு அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு பரப்பலாறு அணை தூர்வாரப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அதனை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியங்களுக்கு அரசு கலைக்கல்லூரி அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

ஒட்டன்சத்திரம் வட்ட அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி தலைமை அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனை அமைய நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் ஒட்டன்சத்திரத்தில் அதிகமாக பயிரிடப்பட்டு வரும் கண்வலிக்கிழங்கு விதையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அதனைத்தொடர்ந்து ஒட்டன்சத்திரத்தில் பிரசித்திபெற்ற காய்கறி சந்தையில் 100 மெட்ரிக் டன் வசதி உள்ள குளிர்சாதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்

மதுரையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்ய வேலைவாய்ப்பு தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்று கூறினார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *