சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் 100வறண்ட ஏரிகளுக்கு நீர் ஏற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டப்பணிகள்: செய்தியாளர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்:

Loading

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரி நீரை ரூபாய் 565 கோடி மதிப்பீட்டில் சரபங்கா நிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
அந்த பணிகளை, செய்தியாளர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் வட்டம், எம். காளிப்பட்டியில் அந்த திட்டத்திற்காக நடைபெற்று வரும் குழாய் பதிக்கும் பணி களையும், திப்பம்பட்டியில் நீரேற்று நிலையத்திற்கான கட்டிட பணிகளையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
இந்த செய்தியாளர் பயண சந்திப்பின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வரும் இந்த திட்ட பணிகள் நிறைவடைந்தடன், மேட்டூர் அணை 120 அடி முழு கொள்ளளவை எட்டும் போது, அணையில் இடது கரையின் நீர்பரப்பு பகுதியில் இருந்து உபரி நீரை,கால்வாய் மூலம் திம்மம்பட்டி நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன் பின்னர் இந்தத் திட்டப் பணிகள் வாயிலாக,
அப்பகுதியில் 100 ஏரிகள் நிரப்பப்பட்டு, அதன் மூலம் 4 ஆயிரத்து 236 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற உள்ளது.
மேலும், மாவட்டத்தின் வறட்சி பகுதிகளான நங்கவள்ளி, மேச்சேரி, வனவாசி,தாரமங்கலம், எடப்பாடி, சங்ககிரி
மற்றும் கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பப்படுவதன் மூலம் அந்த பகுதிகளில் நீர் ஆதாரம் மேம்படும். நிலத்தடி நீர் மட்டமும் உயரும். இந்த பணிகளை, விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் பயணத்தில், கூடுதல் இயக்குனர்/ திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அருள்ஜோதி அரசன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் கௌதமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர் ஜனார்த்தனன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சரபங்கா வடிநில கோட்ட உதவி பொறியாளர் சங்கர், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி. பானுமதி பாலசுப்பிரமணியம், செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் உட்பட தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *