சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்தது குறித்து திமுக சார்பில் கோரிக்கை மனு.

Loading

சென்னை: சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்தது குறித்து சென்னை முன்னாள் மேயர் மற்றும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சென்னை ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் சந்தித்து கோரிக்கை மனுவை திமுக சார்பில் வழங்கினார்,

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“சென்னை மாநகராட்சியில் 10, 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக கரோனா உள்ளிட்ட பேரிடர் காலத்தில் தன் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் மக்கள் உயிரை காப்பாற்றுவதற்காக போராடி வந்தவர்கள். அவர்களது பணி பாராட்டுக்குரியது போற்றக் கூடிய தாகும்.

12 ஆயிரம் ஒப்பந்த பணியாளர்களை தனியார் நிறுவனத்திடம் சில பெயரை ஒப்படைத்துவிட்டு மீதமுள்ள 5 ஆயிரம் பேரை பணியிலிருந்து கடந்த 12ஆம் தேதி மாநகராட்சி முன்னறிவிப்பின்றி நீக்கியுள்ளது.

அவர்கள் மாநகராட்சியை கண்டித்து போராட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர். இந்தநிலையில் 500க்கும் மேற்பட்ட சங்க பிரதிநிதிகள் திமுக அலுவலகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினர், இதனையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த கோரிக்கை கடிதத்தை இன்று மாநகராட்சி ஆணையர் இடத்தில் கொடுத்துள்ளேன்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 10, 12 ஆண்டுகள் பணி புரிந்தவர்கள் திடக்கழிவு மேலாண்மை துறையைத் தவிர பல்வேறு துறைகள் உள்ளது. அந்தத் துறைகளில் 50 சதவீதத்திற்கும் மேல் பணியிடங்கள் காலியாக உள்ளது எனவே இவர்களை அந்தத் துறைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கையை ஆணையரிடம் விடுத்துள்ளோம் ஆணையர் பரிசீலனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் மேயராக இருந்த பொழுது 2,025 ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் 2025 பேரையும் நிரந்தர பணியாளர்களை செய்துள்ளோம் இதையும் மாநகராட்சி ஆணையரிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறோம். எனவே அனைத்து கோரிக்கையும் மாநகராட்சி ஆணையர் ஏற்றுக்கொண்டுள்ளார் விரைவில் நல்ல எடுக்கப் போவதாக அவர் கூறினார்” என தெரிவித்தார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *