கயத்தாறு, கழுகுமலை ஆகிய பகுதியில் உள்ள 8 பள்ளிகளில் பயிலும் 815 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, கயத்தாறு வீரபாண்டிய கட்டப்பொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளி, கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு, கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் 130 மாணவ, மாணவிகளுக்கும், கயத்தாறு வீரபாண்டிய கட்டப்பொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 216 மாணவ, மாணவிகளுக்கும், கடந்த ஆண்டு விடுபட்ட 34 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணி மற்றும் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகளுக்கும், ஆர்.சி. சூசை மேல்நிலைப்பள்ளியில் 96 மாணவ, மாணவிகளுக்கும், கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 99 மாணவிகளுக்கும், லூயிசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 85 மாணவிகளுக்கும், காளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 24 மாணவ, மாணவிகளுக்கும், வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 45 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 815 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.