சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை சந்தை அமைத்து பயன்பெற்று வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டத்தில்
இந்திய மாணவர்களுக்கு உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியும்அரிசோனா மாகாண பல்கலைக்கழகமும் கைகோர்க்கின்றன. புதுமை, கல்வித் திறனுக்கு பெயர் பெற்ற முன்னணி அமெரிக்க பல்கலைக்கழகமான
அட்சய திருதியை, சித்திரைப் புத்தாண்டு பண்டிகை தினங்களை முன்னிட்டு தனிஷ்க் நிறுவனம் மியா பியோரா என்ற நகைகளை அறிமுகம் செய்துள்ளது. அட்சய திருதியை, சித்திரைப் புத்தாண்டு வருவதையொட்டி
அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தற்போது நடைபெற்றுவரும் பணிகள் குறித்த ஆலோசனை! நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நேற்று தலைமைச் செயலகத்தில் 2025-26 ஆம் நிதி ஆண்டின் நிதிநிலை
பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டல அலுவலகங்களிலும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய உதவி மையங்களை மாண்புமிகு மேயர் திருமதி
சிறுவானூர் கண்டிகையில் அரசு புறம்போக்கு நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 11 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைத் தலைவர் ஏ மணிகண்டன் தலைமை தாங்கினார். ஊரக
ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உட்படகட்டுமான பொருட்களின் விலைஉயர்வினை மறுபரிசீலனை செய்ய தமிழக முதல்வருக்கு பெயிரா வேண்டுகோள் தமிழகத்தில் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தினர் 22.04.2025 முதல் கட்டுமான பொருட்களான தயாரிப்பு மணல், ஜல்லி உள்ளிட்ட பொருட்களின் மீதான கடும் விலை உயர்வினை அறிவித்துள்ளார்கள். தமிழக அரசு கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த பொதுமக்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையினை சார்ந்தவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றத்தையும், பேரதிர்ச்சியினையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அனைத்து தரப்பினரின் நலன் கருதி விலை உயர்வினை மறுபரிசீலனை செய்து முறையான விலையினை நிர்ணயிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு நாடும் – ஏடும் – நாளும் போற்றும் வகையில் மிகச் சிறப்பான முறையில் முதல்வரின் (தங்களின்) சீரிய தலைமையின் கீழ் ஆட்சி புரிந்து வருவது மிகவும் பாராட்டுதலுக்குரியது. மனிதனின் அடிப்படை வாழ்வியலில் உணவு, உடை, இருப்பிடம் என்பது மிகவும் அத்தியாவசியமாகவும், இன்றியமையாததாகவும் உள்ளது என்பது தங்களுக்கு நன்கு தெரியும். திராவிட மாடல் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு சமீபகாலமாக கட்டுமான பொருட்களின் விலை மனிதனை மெல்ல கொள்ளும் விஷத்தை போன்று, கண்ணை கட்டும் அளவிற்கும் – விண்ணை முட்டும் அளவிற்கும் செயற்கையான முறையில் உச்சபட்சமாக உயர்ந்து வருகிறது. உயர்ந்து வரும் கட்டுமான பொருட்களின் விலையினை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து பெயிரா கூட்டமைப்பின் சார்பாக FAIRA கடித எண்: 078 தேதி: 25.03.2025 அன்று தங்களுக்கு கடிதம் எழுதி இருந்தோம். அக்கடிதத்தில் கட்டுமான பொருள்களின் விலை ஏற்றதற்கு முக்கிய காரணிகளாக இருப்பது மைய அரசு மற்றும் மாநில அரசுகள் கட்டுமான சார்ந்த பொருட்களின் மீது விதிக்கப்படும் அதிக வரி விதிப்பு, குவாரி உரிமையாளர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் கட்டுமான பொருட்களின் தட்டுப்பாடு, எரிபொருட்களின் விலை ஏற்றத்தினால் ஏற்படும் போக்குவரத்திற்கான செலவு போன்றவைகள் என குறிப்பிட்டு இருந்தோம். கட்டுமான பொருட்களின் விலை ஏற்றதற்கு முக்கிய காரணியாக இருப்பது கல் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் அனுமதி பெற்று 3,000க்கும் மேற்பட்ட கருங்கல் குவாரிகள், 4,800 கல் உடைக்கும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான குவாரிகள், கிரஷர்கள் தனியார் நிலங்களில் செயல்படுகின்றன. குறிப்பாக தமிழகத்தில் அனுமதி பெற்று செயல்படும் குவாரிகளில் முன்னறிவிப்பின்றி தான்தோன்றித்தனமாக திடீர் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து, அதன் மூலம் செயற்கையான கட்டுமான பொருட்களின் தட்டுப்பாட்டனை உருவாக்கி அரசிற்கும் பொது மக்களுக்கும் நெருக்கடியை உண்டாக்கி, ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உட்பட கட்டுமான பொருட்களின் விலையினை உயர்த்திக் கொள்ளும் தந்திரத்தினை கடைபிடித்து கல் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் தங்களின் காரியத்தை சாதித்து வருகிறார்கள். இதற்கு சமீபத்தில் நடந்த கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். சிறு கனிம நிலவரி உள்ளிட்ட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16.04.2025 ஆம் தேதி முதல் முதல் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தமிழக அரசு கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு,
போக்சோ குற்றங்களை முன் கூட்டியே தடுக்க வகையில் விரைவில் “நிமிர்” திட்டம் துவங்கி உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட காவல்
ராணிப்பேட்டையில் அமைச்சர் பொன்முடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது போலீசாருக்கும் அஇஅதிமுகவினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து