கோவைபாப்பநாயக்கன்புதூரில்கோரிக்கைதெருமுனைகூட்டம்
![]()
கோவை
கோவை பாப்பநாயக்கன் புதூரில்
கோரிக்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஒன்றிய பாஜக அரசின் தொழிலா ளர் மற்றும் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, வரும் 12ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம், மறியல் நடைபெற உள்ளது.
இது குறித்து கோரிக்கை விளக்க தெருமுனைக்கூட்டம் பாப்பநாயக்கன் புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஏஐடியுசி அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என். சந்திரன் தலைமை தாங்கினார்.இதில் எல். பி. எப், சி.டி.சி துரை, ஏஐடியுசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், சிவசாமி ஐ.என்.டி.யூ.சி. ரங்கநாதன்,
சந்தோஷ் , யூடியூசி
கனகராஜ் , மாமன்ற உறுப்பினர் சாந்திசந்திரன், ஹெச். எம். எஸ். மோகன்ராஜ் ஏஐடியுசி சிவா ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் திமுக பா.நா.புதூர் பகுதி செயலாளர் பரணி பாக்யராஜ் மற்றும் அவைத்தலைவர் சிவா,
வட்ட கிளை செயலாளர்கள் தம்பி சண்முகம், நித்யானந்தம், சுரேஷ்,ஹரி,பாலு,தம்பு,தங்கவேல் ,
வள்ளி
சிபிஐ சார்பில் அசரப்அலி, மகாலிங்கம், அப்துல்சமது, அன்பரசன்,முரளி
சிபிஎம் சார்பில் காசிவிஸ்வநாதன்,
காங்கிரஸ் சார்பில் கணேசன், கார்த்தி,
சண்முக சுந்தரம்
மதிமுக சார்பில் ,பாபு (எ) சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் சிஐடியு கோபால் அவர்கள் நன்றியுரை கூறினார்.

