முதியோர்மனமகிழ்வள மையம் அன்புச்சோலைதிட்டம்
![]()
ஈரோடு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக முதியோர் மனமகிழ் வள மையம் “அன்புச்சோலை” திட்டத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு மாநகராட்சி, லட்சுமி கார்டன், சேரன் நகர் அன்புச்சோலை இல்லத்தில் முதியோர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடுவதை பார்வையிட்டார்.
உடன் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இ.ஆ.ப., ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ் உட்பட பலர் உள்ளனர்.

