ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் பணிகள்.. MP சசிகாந்த் செந்தில் தகவல்!

Loading

ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் கொண்டு பணிகள் கழிவுநீர் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சசிகாந்த் செந்தில் கூறினார்.

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சசிகாந்த் செந்தில் தலைமை தாங்கினார்.மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சந்திரன் (திருத்தணி), ஆ.கிருஷ்ணசாமி, (பூந்தமல்லி) எஸ்.சுதர்சனம் (மாதவரம்) டி.ஜே.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டி, .துரை சந்திரசேகர் (பொன்னேரி) ஆவடி மாநகராட்சி ஆணையர் ச,கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டம் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம், மண் வள அட்டை திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாய தொழில்நுட்ப மேலாண்மை முகமை, பாரம்பரிய அங்கக வேளாண்மை திட்டம் சூரிய சக்தியாக இயங்கும் பம்பு செட்கள், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம்,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகையில்,இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குறைகளையும் மக்கள் பிரதிநிதிகள் உடன் கேட்டு அவருடைய கேள்விகளுக்கு பதில்களும் கடந்த முறை நடந்த திஷா முடிவுகளுக்கு பதில்களும் ஆய்வுகள் செய்யப்பட்டது. மேலும் சட்டமன்ற உறுப்பினர் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து அரசு அலுவலர்களிடம் விவாதித்தார்கள். தொடர்ந்து மாவட்டத்திற்கு தேவையான எல்லாவிதமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், சுகாதாரம், கல்வி போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையான வேப்பம்பட்டு இரயில்வே மேம்பாலம் முடியும் தருவாயில் உள்ளது. அதேபோல் செவ்வாப்பேட்டை மேம்பால பணிகள் ஆறு மாதத்திற்குள் முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும், மீஞ்சூர் இரயில்வே மேம்பால பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நானும் மாவட்ட ஆட்சித் தலைவரும் சுத்திகரிப்பு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பொழுது சுத்திகரிப்பு மையத்திற்கு வரும் கழிவுநீர் அதிகமாக வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலாக சுத்திகரிப்பு மையத்திற்க்கான பணிகளும் அருகில் நடைபெற்று வருகிறது. ஏரியில் கழிவுநீர் கலக்காத வகையில் பைப் லைன் கொண்டு பணிகள் கழிவுநீர் வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை தேர்வாய் கண்டிகை, காட்டூர் ஏரி,நேமம் போன்ற பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு,சுரேஷ் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயகுமார், பொன்னேரி சார் ஆட்சியர் ரவிக்குமார், மாவட்ட வன அலுவலர் சுப்பையா, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர் அரசு அலுவலர்கள் மற்றும் திஷா உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares