17 வயது சிறுவனை மயக்கி திருமணமான இளம்பெண் உல்லாசம்!
17 வயது சிறுவனுடன் 32 வயது திருமணமான இளம்பெண் குடித்தனம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் காளீஸ்வரி,இவரது கணவர் வெளியூரில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில் இவருக்கு களக்காடு அருகே உள்ள தேவநல்லூரில் உள்ள பன்றி பண்ணையில் வேலை பார்த்துவரும் 17 வயது சிறுவனுடன் இன்ஸாடாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பை தொடராமல் வேலைக்கு சென்றுவந்த நிலையில், வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு ஓய்வில் இருக்கும் நேரங்களில் காளீஸ்வரியுடன் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார்.
இவர்களது பழக்கம் ஓராண்டாக தொடர்ந்த நிலையில், காளீஸ்வரி அந்த சிறுவனை தன்வசப்படுத்த விரும்பி கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பகலிலும், இரவிலும் சிறுவனுடன் இன்ஸ்டாவில் இனிக்க இனிக்க பேசி வந்துள்ளார்.இதையடுத்து காளீஸ்வரி, பன்றி பண்ணையில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. காளீஸ்வரி விரும்பும் போதெல்லாம் பன்றி பண்ணைக்கு சிறுவனை அழைத்து உல்லாசமாக இருப்பாராம்.
இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் வெறி அடங்காத காளீஸ்வரி அந்த சிறுவனை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று களக்காடு கோவில்பத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து ஜாலியாக இருந்துள்ளனர்.
இதனை அறிந்த சிறுவனின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலிசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் காலீஸ்வரி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று தேடி கண்டுபிடித்து கைது செய்தனர் . மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.