முருக பக்தர்கள் மாநாட்டில் துணைநிலை ஆளுநர் பங்கேற்பு!

Loading

மதுரையில் நடைபெற்று வரும் முருக பக்தர்கள் மாநாட்டில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று கலந்து கொண்டு அங்கு நிறுவப்பட்டுள்ள ஆறுபடை வீடு முருக கடவுளை கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டார்.

மதுரையில், ‘குன்றம் காக்க… கோவிலை காக்க’ என்ற பெயரில் முருக பக்தர்கள் மாநாடு, மதுரையில், ஜூன் 22ல் ஹிந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ளது.

அரசியல் அல்லாத ஆன்மிக மாநாடாக இது நடைபெறும். இந்த மாநாட்டில், அறுபடை வீடு தொடர்பான கண்காட்சி இடம்பெற்று உள்ளது. முன்னாள் முதல்வர் பழனிசாமி, த.மா.கா., தலைவர் வாசன், நடிகர் ரஜினி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மடாதிபதிகள் மற்றும் தி.மு.க., – அ.தி.மு.க., – பா.ஜ., – காங்., உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சேர்ந்த எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளனர்.

பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஏராளமானோர் அறுபடை அருட்காட்சியில், முருகனின் தரிசனம் பெற்று அருள் பெற்றனர்..கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தை, தங்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் கட்டிப்போட்ட கிராமிய கலைஞர்கள்..மூன்றாம் நாள் அறுபடை அருட்காட்சி, மாநாடு நடைபெறும் அம்மா திடலில் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது..இந்தநிலையில் மதுரையில் நடைபெற்று வரும் முருக பக்தர்கள் மாநாட்டில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று கலந்து கொண்டு அங்கு நிறுவப்பட்டுள்ள ஆறுபடை வீடு முருக கடவுளை கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர், தான் ஒரு முருக பக்தனாக தன்னுடைய குலதெய்வமான முருகனை வழிபட வந்திருப்பதாகவும், முருக கடவுள் பழங்காலத்தில் இருந்து தமிழர்களால் வழிபடும் கடவுளாக இருப்பதாகவும் உலகம் எங்கும் தமிழர்கள் முருக வழிபாட்டை கொண்டு சென்று இருப்பதாகவும். தமிழ்நாட்டில் படித்து வளர்ந்த தான் குஜராத்தில் 45 ஆண்டுகளாக பணியாற்றிய போதும் முருக வழிபாட்டை இன்னும் மறக்கவில்லை என்றும் முருகன் மீது உள்ள பக்தியின் காரணமாக வந்திருப்பதாகவும் எடுத்துக் கூறினார்.

0Shares