திருநெல்வேலி பாளையில் IIP லட்சுமி ராமன்,CBSE, பள்ளி வளாகத்தில் ஆர்ய சமாஜம் புதிய கிளை திறப்பு

Loading

திருநெல்வேலி
திருநெல்வேலி பாளையில் IIP லட்சுமி ராமன்,CBSE, பள்ளி வளாகத்தில் ஆர்ய சமாஜம் புதிய கிளை திறப்பு விழா 2.02.2025 அன்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக  ஆர்ய சமாஜம் பிரச்சார பணி தொடக்க விழா 15.6.2025 அன்று அக்னி  ஹோம  வேல்வியுடன் தொடங்கியது. நெல்லை சங்கீத சபா அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில்  ‘ஆர்ய சமாஜத்தை தெரிந்து கொள்வோம்’  என்ற புத்தகத்தை ஆரிய சமாஜத்தின் திருநெல்வேலி வட்டார தலைவர்
 இரா. அனந்தராமன் வெளியிட சென்னை ஆரிய சமாஜத்தின் தலைவர் லலித் நாங்கி யா பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில்  புதுச்சேரி வேத வித்யா பாலகுரு, திருநாவுக்கரசர், சமூக ஆர்வலர் நெல்லை வெங்கடாஜலபதி, பஞ்சாப் தேசிய வங்கியின் துணை மேலாளர் சேகர், பொதிகை தொலைக்காட்சியின் முன்னாள் செய்தி பிரிவு தலைவ‌ர் ஐ .விஜயன் ,சமூக ஆர்வலர் வெங்கடாஜலபதி , ஆர்ய சமாஜத்தின் திருநெல்வேலி செயலாளர் ஆ. தி. பூவைய்யா,தஞ்சை மாவட்ட ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த அன்னை தாசன்,  ஐயப்பன், வழக்கறிஞர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு  ஆர்யா சமாஜத்தின் பங்கு பணிகள் பற்றி எடுத்துரைத்தனர்.
0Shares