கடலூர் MP விஷ்ணு பிரசாத் பரிந்துரையை கிடப்பில் போட்ட ரயில்வே நிர்வாகம்..போராட்டம் நடத்த மக்கள் முடிவு!
கடலூர் MP விஷ்ணு பிரசாத் பரிந்துரையை கிடப்பில் போட்ட ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர பகுதியில் விக்கிரவண்டி & சென்னை செல்லும் சாலையில் பண்ருட்டி நகரத்தில் ரயில்வே கேட் மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ளது. இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
கீழ்ப்பகுதியில் ரயில் செல்வதற்காக ரயில்வே நிர்வாகம் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது பண்ருட்டியில் நகரப் பகுதியில் சுமார் 20,000 மேற்பட்ட குடும்பங்கள் இந்த ரயில்வே கேட் வழியாக கடந்து செல்ல வேண்டும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு தேவையான பொருட்களை பண்ருட்டி நகரப் பகுதியில் மார்க்கெட் பகுதிக்கு செல்ல வேண்டும் .அது மட்டும் இல்லாமல் பள்ளிக்கூடத்திற்கு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் இந்த ரயில்வே கேட் பகுதியில் கடந்து செல்ல வேண்டும் நிலையில் தான் உள்ளது தற்போது இந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடியதால் நடந்து செல்பவர்கள் இந்த ரயில்வே கேட் மூடிய குறுகிய வழியில் கடந்து செல்கிறார்கள்.
ரயில்வே நிர்வாகம் ரயில்வே கேட் கடந்து செல்வதற்காக படிக்கட்டு நட பாதையை பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது ஆனால் அந்த படிக்கட்டு பாதையை வயதானவர்களும், பொதுமக்களும், மாணவ மாணவிகளும் ஏறி இறங்குவதற்கு மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள் அதனால் அதை பயன்படுத்த முடியவில்லை பல லட்சம் ரூபாய் வீணாக்கப்பட்டுள்ளது. அந்த நடைமேடை தற்போது முழுமையாக கடந்து செல்வதற்கு பயன் அளிக்கவில்லை தற்போதுமது போதை அருந்தும் இடமாக மாறி உள்ளது. இந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்களின் கோரிக்கை என்னவென்று சொன்னால் அந்த மூடப்பட்ட ரயில்வே கேட் பக்கத்தில் தண்டவாளத்திற்கு பகுதியில் நீர் போவதற்காக ஒரு சிறு வழியை ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அங்கு பாதையை உருவாக்கி வைத்து இருகிறது .
அந்தப் பகுதியை அகலப்படுத்தி அவசரத்திற்கு ஒரு ஆட்டோ செல்லும் வகையில்அந்தப் பாதை இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்கின்றனர் இந்த பகுதியில் வசிக்கின்ற மக்கள் இறந்தவர்களை சுடுகாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த மேம்பாலத்தின் மேல் வழியாகச் சென்று இறங்கி கடக்க வேண்டிய உள்ளது.
மிகவும் சிரமப்பட்டு கடந்து சென்று வருகிறார்கள்.
அது மட்டுமில்லாமல் படிக்கும் குழந்தைகள் விவசாயிகள் தங்களுடைய பொருட்களை மார்க்கெட் பகுதியில் கொண்டு வந்து விற்பதற்கும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள் அது மட்டுமில்லாமல் நான்கு முனை சந்திப்பில் அதிகமான போக்குவரத்து இருப்பதால் இந்த மேம்பாலம் வழியாக கடந்து செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் இதையெல்லாம் கருத்தில் கொண்டு கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் விஷ்ணு பிரசாத் அவர்களிடம் மக்களுடைய கோரிக்கையாக இந்த பகுதியில் ரயில்வே கேட் பகுதியில் சர்வீஸ் சாலை அமைந்துள்ள பாதையைசரி செய்து அந்த சிறிய பகுதியை பெரிதாக்கி ஆட்டோ டூவீலர்கள் செல்லும் அளவுக்கு ரயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையைMP அவர்களிடம்பல மாதங்களுக்கு முன் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
அவரும் அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அந்த இடத்தை ஆய்வு செய்தார் அப்போது பண்ருட்டிநகர மன்ற தலைவர் அவர்களும் அங்கு இருந்தார்கள் மற்ற கட்சி நிர்வாகிகளும் ஆய்வு சமயத்தில் எம்பி அவர்களிடம் மக்கள் படும் சிரமங்களை எடுத்துரைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை எடுத்துரைக்கப்பட்டது.இதற்கு எம்பி அவர்கள் நடவடிக்கையை மேற்கொள்கிறேன் என்று கூறினார் அவரும் ரயில்வே போர்டு கட்டமைப்பு உறுப்பினர் நலின் குலாட்டி அவர்களிடம் பண்ருட்டி ரயில்வே கேட் கீழ் பகுதியில் சிறிய சுரங்கப்பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை எம்பி அவர்கள் அளித்துள்ளார். அந்த செய்தியும் நம் பார்த்து இருக்கிறோம் ஆனால் இதுனால் வரை அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை ஆகையால் இங்கு வாழக்கூடிய மக்கள்தினம் தினம் மிகவும் சிரமங்களை சகித்துக் கொண்டு வருகிறார்கள்.
ஆகையினால் இந்த கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி இதை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் பண்ருட்டி வாழ்கின்ற மக்களின் கோரிக்கையாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி இந்த கோரிக்கையை முன்வைக்கப்படுகிறது என்பதை அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக் நூருதீன் அவர்கள் தெரிவித்துள்ளார் ஆகையால் கோரிக்கையை நிறைவேற்றி தரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மக்களை திரட்டி போராட்டம் செய்வது தவிர வேறு வழி இல்லை என்று கூறியிருக்கிறார்