புதுச்சேரிக்கு தேவையான நிதியை மத்திய அரசு அளிக்கிறது..மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சொல்கிறார்!

Loading

மாநில அந்தஸ்து தொடர்பான கருத்துக்களை பிரதமரிடம் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தி வருகிறார்.புதுச்சேரிக்கு தேவையான நிதியை மத்திய அரசு அளித்து வருகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

2-நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள புதுச்சேரி வருகை தந்துள்ள மத்திய இணை அமைச்சர் முருகனை நேற்று பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி, அமைச்சர் சாய் சரவணன், சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் ஆகியோர் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையை காகிதம் இல்லா சட்டப்பேரவையாக மற்றும் விதமாக தேசிய இ-விதான் செயலி தொடக்க விழா தனியார் விடுதியில் நடைபெற்றது. மத்திய பாராளுமன்ற விவகாரங்கள்துறை இணையமைச்சர் எல்.முருகன் குத்துவிளக்கேற்றி இ-விதான் செயலியை தொடங்கி வைத்தார். துணைநிலை ஆளுநர்  கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்,  அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சரவணன்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, தலைமைச் செயலர் சரத் சௌகான், மத்திய அமைச்சக செயலர் உமங் நருலா, கூடுதல் செயலர் சத்திய பிரகாஷ், புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்று இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக பிதரமரின் 11-ஆண்டுகளின் சாதனைகளை , மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் சாதனை புத்தகத்தை வெளியிட்டார். இதனை மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.சரவணன்,சட்டமன்ற உறுப்பினர்கள்- ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன் ஆகியோர் பெற்றுக்கொண்டார்.

அப்போது விழாவில் பேசிய மாநில மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியதாவது:மாநில அந்தஸ்து தொடர்பான கருத்துக்களை பிரதமரிடம் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தி வருகிறார்.
புதுச்சேரிக்கு தேவையான நிதியை மத்திய அரசு அளித்து வருகிறது.மத்திய அரசின் உதவியுடன் புதுச்சேரி வளர்ந்துகொண்டிருக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

0Shares