தனிநபர், தனியார் அமைப்பு நடத்தும் ஜல்லிக்கட்டை தடை விதிக்க கோரி மனு!

Loading

தனிநபர், தனியார் அமைப்பு நடத்தும் ஜல்லிக்கட்டை தடை விதிக்க கோரி தமிழர் மாணவ இளைஞர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் தனிநபருக்கு அனுமதி அளிக்கக்கூடாது அப்படி ஜல்லிக்கட்டு நடத்தினால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என்று மனு அளித்தனர்.

புதுச்சேரியில் கடந்த 2017 ஆம் ஆண்டு சமூக ஆர்வலர்கள் போராளிகள் மாணவர்கள் பொதுமக்கள் வியாபாரிகள் அரசியல் பிரமுகர்கள் அனைவராலும் ஜல்லிக்கட்டு போராட்டம் ஏ எஃப் டி திடலில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று.

மத்திய அரசு ஜல்லிக்கட்டு தடையை நீக்கிய உடன் போராட்டக்காரர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர் பிறகு 2019 ஆம் ஆண்டு புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு நடத்த ஜல்லிக்கட்டு பேரவை என்ற பெயரில் ஒரு தனியார் அமைப்பு தனிநபர் அவர்கள் தலைமையில் தான் புதுச்சேரியில் பெயரால் வசூல் வேட்டை நடைபெற்ற போது.

அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு அருண் அவர்களிடம் புகார் அளித்து தடுத்து நிறுத்தினோம். தற்போது ஒரு தனிநபர் 2017 ஆம் ஆண்டு புதுச்சேரியில் அவர்கள் தலைமையில் தான் புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது என்று தோற்றத்தை உருவாக்கி பொய்யான தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கும் அளித்து புதுச்சேரி அரசுக்கும் தெரிவித்து தற்போது ஒரு தனி நபர் ஜல்லிக்கட்டு பேரவை என்ற பெயரில் தனியார் நிறுவனம் அமைப்பு சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்து.

அவர்களை அழைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது சம்பந்தமாக இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதை அறிந்து அதனை தொடர்ந்து இன்று ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் ஒன்றிணைந்த விழித்தெழுந்த தமிழர் மாணவ இளைஞர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் தனிநபருக்கு அனுமதி அளிக்கக்கூடாது அப்படி ஜல்லிக்கட்டு நடத்தினால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கூறி அளிக்கப்பட்டது.

 

0Shares