கலைஞர் பிறந்த நாள் விழா..1,000 மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கதிர்காமம் தொகுதி திமுக கொண்டாட்டம்! 

Loading

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்த நாள் மற்றும் “செம்மொழி நாள்” விழாவை முன்னிட்டு கதிர்காமம் தொகுதியில் 1,000 மகளிருக்கு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடபட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்த நாள் மற்றும் “செம்மொழி நாள்” விழாயொட்டி, புதுச்சேரி முழுவதும் கழகத்தினர் மருத்துவ முகாம்கள், குருதிக்கொடை வழங்குதல், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக்கூட்டம் நடத்தி கலைஞரின் சாதனைகளை விளக்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கதிர்காமம் தொகுதி கழகம் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102-ஆவது பிறந்தநாள் மற்றும் “செம்மொழி நாள்” விழா சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் சிறப்பாக கொண்டாடபாபட்டது. தொகுதி செயலாளர் APR. வடிவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், மாநில கழக அமைப்பாளரும் இரா. சிவா அவர்கள் கலந்துகொண்டு, சிறப்பரையாற்றி சுமார் 1,000 மகளிருக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திரு உருவப் படத்திற்கு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தலைமையில் கழகத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல் மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரிஸ்ரீகாந்த், தொகுதி கழக நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், அவைத்தலைவர் கண்ணபிரான்,தொகுதி பொறுப்பாளர்கள் இரா. ராசு, சரவணன், வழக்கறிஞர் ஆனந்த பாஸ்கரன், வினோத்கண்ணன், இளைஞரணி கதிர், பொருளாளர் நசீர், தகவல் தொழில்நுட்ப அணி உமேஷ் இசைமணி, சிவகுமார் இப்ராஹிம், செ.சுரேஷ்குமார், ரமேஷ் அருணாச்சலம்,
ரமேஷ்ஜெயசுமதி, அன்பு, சிவக்குமார், ராஜா, சிவா, கே.சிவகுமார், சுரேஷ், சத்தியகுமார், சீனிவாசன், செந்தில், கலியபெருமாள், டி.ரமேஷ், பி.சுரேஷ், ருத்தரமூர்த்தி, பிரபு, ஆறுமுகம், மனோகர், மூர்த்தி, மணி, சிவராஜ், அருண், பத்மநாதன், சிவமுருகன், திருநாவுக்கரசு, லிங்கம், ஆனந்த், பாலு, கூடலிங்கம், பாபு, லியோநாதன், கலையரசன், சஞ்சய் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

0Shares