+2 தேர்வில் புதுவயல் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை!

Loading

காரைக்குடி அருகே புதுவயல் கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2024-2025 கல்வி ஆண்டில் 46 மாணவர்கள் +2 தேர்வு எழுதியிருந்தனர்.

+2 தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில், புதுவயல் கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் மணிகண்டன் 568 மதிப்பெண்கள்பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார்

நவீன் குமார் என்ற மாணவர் 564 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.சஞ்சய் என்ற மாணவர் 563 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

மேலும் கணினி அறிவியல் – 6கணினி பயன்பாடுகள் – 1 ஆக மொத்தம் 7 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணித பாடத்தில் -1கணினி அறிவியல் பாடத்தில் – 1வணிகவியல் பாடத்தில் – 1கணினி பயன்பாடுகள் பாடத்தில் – 3 என மொத்தம் 6 பேர் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மேலும், 5 மாநகர்கள் 550 மதிப்பெண்களுக்கு மேலும் 12 மாணாக்கர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேலும்43 மாணாக்கர்கள் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சாதனை புரிந்த மாணாக்கர்கள் மற்றும் தேர்ச்சிபெற்ற அனைவரையும் பள்ளித் தாளாளர் பரமேஸ்வரன் வாழ்த்திப் பாராட்டினார். தொடர்ந்து, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் அனைத்து மாணாக்கர்களையும் பாராட்டினர்.

0Shares