குளத்தில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி!
ஸ்ரீ வீரராகவர் பெருமாள் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண தொகை ரூ.3 இலட்சத்திற்கான காசோலை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செங்குன்றத்தை சேர்ந்த வெங்கட்ராமன், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை சேர்ந்த ஹரிஹரன், விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் சேர்ந்த செல்வன்.ராஜா (எ) வீரராகவன் ஆகியோர் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த யொட்டி அவர்களது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் பொது நிவாரண தொகை ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. இராஜேந்திரன் (திருவள்ளூர்) , எஸ்.சந்திரன் (திருத்தணி), மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் முன்னிலையில் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம், எண்.15/2, பாத்திமா தெரு, காமராஜர் நகர், செங்குன்றத்தை சேர்ந்த வெங்கட்ராமன் த/பெ சுதர்சன், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், எண் 19, ஆதவன் தெரு உதயம் நகரை சேர்ந்த ஹரிஹரன் த/பெ மணிவண்ணன் , விருதுநகர் மாவட்டம், எண் 300, ஜெமினி காம்பவுண்ட், குறுக்கு பாதை அருகில், திருத்தங்கல் சேர்ந்த ராஜா (எ) வீரராகவன் த/பெ ரவி 06.05.2025 அன்று திருவள்ளுரில் உள்ள ஸ்ரீ வீரராகவர் பெருமாள் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள்.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்த அவர்களின் தந்தை சுதர்சனம், மணிவண்ணன், ரவி ஆகியோரிடம் முதலமைச்சர் பொது நிவாரண தொகை ரூ. 3 இலட்சத்திற்கான காசோலையினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
இதில் தனித்துணை ஆட்சியர் (சபாதி) பாலமுருகன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவஞானம் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) சங்கிலி ரதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.