மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முதன்மை வகித்த கவுன்சிலர்களுக்கு பாராட்டு!
ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ஆற்காடு ஒன்றியம் முதன்மை வகித்து வருவதால் அனைத்து கவுன்சிலர்களும் ஒன்றிய குழு தலைவர் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து நன்றியையும் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு சார்பாக நடைபெற்ற மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார் முன்னிலை வகித்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர் அனைவரையும் ஒருங்கிணைத்தார். இதில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் முக்கியமாக கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் ஆற்காடு ஒன்றியம் முதன்மை வகித்து வருவதால் அனைத்து கவுன்சிலர்களும் ஒன்றிய குழு தலைவர் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து நன்றியையும் தெரிவித்தனர்.இந்த கூட்டத்தில் பல்வேறு பல்வேறு பிரச்சனைகளை விவாதித்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.