குன்னூர் ஸ்ரீதந்தி மாரியம்மன் திருக்கோயிலில் 80 ஆண்டு முத்துபல்லக்கு திருத்தேர்திருவிழா..திரளான பக்தர்கள் தரிசனம்!
குன்னூர் பிரசதிபெற்ற நூற்றாண்டு பழமைமிக்க அருள்மிகு ஸ்ரீதந்தி மாரியம்மன் திருக்கோயிலில்திருத்தேர் திருவிழாகொடியேற்றத்துடன் துவங்கி திருக்கல்யாண உற்சவம், பூகுண்டம் இறங்குதல் ,போன்ற பல்வேறு திருவிழா நடைபெற்று,
அதனை தொடர்ந்து, 80 ஆண்டு முத்துபல்லாக்கு திருத்தேர் திருவிழா காலை அம்மனுக்கு அபிஷேக சிறப்பு அலங்கார ஆராதனையுடன் நடைபெற்றது.அம்மனின் சிறப்பு முத்துபல்லாக்கு ரதத்தில் சிறப்பு அலங்காரத்துடன் குன்னூர் நகர பல்வேறு வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார்.
இந்த முத்துபள்ளாக்குஅம்மனின் ரதத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.