மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்!

Loading

ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய மோடி அரசையும் அமலாக்கத் துறையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் மோடி அரசாங்கம் தன்னிச்சையாக சட்டத்திற்கு புறம்பாக நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை பறிமுதல் செய்து சோனியா காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்துறை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளது. இதை கண்டிக்கும் வகையில் ஆற்காடு நகரத் தலைவர் எஸ்.பியாரேஜான் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் பஞ்சாட்சரம் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டனை உரையாற்றினார். ஆற்காடு கிழக்கு ஒன்றிய தலைவர் வீரப்பா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் விநாயகம், மாவட்ட செயலாளர் தீபன், நிர்மல், மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவி வசந்தி, திமிரி வட்டாரச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொதுச் செயலாளர் நந்தகுமார் மேச்சேரி பன்னீர்செல்வம் வாலாஜா ஒன்றிய தலைவர் கணேசன், வாலாஜா நகர தலைவர் மணி பிஎஸ்என்எல் சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் இளைஞர் காங்கிரஸ் முஜீப் விசாரம் அழகேசன் வாலாஜா கதிர்வேல் கல்யாணகுமார் தணிகை மணி காவனூர் பாபு (எ)ரேணுகோபால் ஆற்காடு ஒன்றியம் கணேசன் தங்கராஜ் மகிலா காங்கிரஸ் பவுன் சிங்காரி சசிகலா ரவி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

0Shares