வேப்பெண்ணெய் கரைசல் செய்முறை விளக்கம் செய்த கல்லூரி மாணவர்கள்!
பல்லவராயநத்தம் ஊராட்சியில் தஞ்சாவூர் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் வேப்பெண்ணெய் கரைசல் செய்முறை விளக்கம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் அண்ணா கிராம ஒன்றியம் பல்லவராயநத்தம் ஊராட்சியில், தஞ்சாவூர் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி கிராமப்புற சூழ்நிலைகள் மற்றும் விவசாய தொழில்நுட்பங்களின் பற்றி பயிற்சி பெற்று வருகின்றனர்
இவர்கள் இரசாயன மருந்து இல்லாமல் பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை முறையில் வேப்பெண்ணெய் கரைசல் மூலம் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு விளக்கினர்.வேப்பெண்ணெய் கரைசலை விவசாயியின் நிலத்திலேயே செய்து பயன்படுத்தி காட்டினர்.வேப்பெண்ணெய் கரைசல் விவசாயத்தில் மிகவும் எளிமையாக பயன்படுத்தப்படும் ஒரு பூச்சிக்கொல்லியாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் இதனை பயன்படுத்தும் போது பூச்சிகள் தாவரங்களை சேதப்படுத்துவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் முனைவர் விஜய்செல்வராஜ் இம்மாணவர்களை வழி நடத்துகிறார்.