இலங்கை அரசை கண்டித்து தூத்துக்குடி மீனவர்கள் போராட்டம்.. தமிழக மீனவ மக்கள் கட்சி ஆதரவு!
தமிழக மீனவர்கள் இலங்கை சிங்கள இனவாத அரசால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவ மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் இளம்தலைவர் டாக்டர் அ.கோல்டன் பரதர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
தமிழக மீனவர்கள் இலங்கை சிங்கள இனவாத அரசால் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து ,தூத்துக்குடி மாவட்ட அனைத்து விசைப்படகு தொழிலாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மண்ணில் கண்டன ஆரப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக தமிழக மீனவ மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் இளம்தலைவர் டாக்டர் அ.கோல்டன் பரதர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது இந்த ஆர்ப்பாட்டத்தில் உடன் கட்சியின் மாநில தலைவர் கெ.ராஜசேகர் பர்ணாந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அமைப்பாளர் திரு.ரெமி.வி.ராயர் தூத்துக்குடி ஒன்றிய பெறுப்பாளர் திரு.குமார் தூத்துக்குடி மாவட்ட பிரதிநிதி திரு.ராஜேஷ் மற்றும் சங்கரசுப்பு மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.