கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர் மீது குண்டா சட்டம் பாய்ந்தது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர் மீது குண்டா சட்டம் பாய்ந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்றி தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 68க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இதுவரை சிபிசிஐடி போலீஸாரால் 24 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அதில் 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சு. பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார் இதன் மூலமாக கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில் இதுவரை 16 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பயந்துள்ளது.