தேசிய முற்போக்கு திராவிடக்  கழகம் சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் .!

Loading

தேசிய முற்போக்கு திராவிடக்  கழகம்சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் .!


ஈரோடு செப் 15
தேசிய முற்போக்கு திராவிடக்  கழகத்தின் இருபதாம் ஆண்டு துவக்க நாளை முப்பெரும் விழா பொதுக்கூட்டமாக ஈரோடு தே மு தி கவினர் கொண்டாடினர்
 ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில்  மாவட்டக் கழகச் செயலாளர் ஆனந் தலைமையில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
டி.ஆர்.சரவணன் கழக விவசாய அணி துணைச் செயலாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நால்ரோடு பகுதி கழகச் செயலாளர் சண்முகவேல் வரவேற்புரை ஆற்றினார்.  தொழிற்சங்க செயலாளர் இ.ஆர்.டி.மூர்த்தி, மரப்பாலம் பகுதி கழகச் செயலாளர் குமார் என்கிற சுப்பிரமணி, சூரம்பட்டி பகுதி செயலாளர் சுரேஷ், தலைமைக் கழக பேச்சாளர் ஆர் அர்ஜுனன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளாக சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டிகள், கட்டிட தொழிலாளர்களுக்கு கார சட்டி, மண்வெட்டி, கை கரண்டிகள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு  டிபன் பாக்ஸ், வாட்டர் கேன், நோட் புத்தகம்,  ஜாமென்ட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ் ஆகியவை, பொதுமக்களுக்கு சேலைகள், அரிசி டரம் ஆகிய பொருட்கள் நலத்திட்ட உதவிகளாக சுமார் 320 -க்கு மேற்பட்டோருக்கு  சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்டம் ஈரோடு மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டு இருபதாம் ஆண்டு துவக்க நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின் இறுதியில் சூரம்பட்டி பகுதிகளகச் செயலாளர் சுரேஷ் நன்றியுரை ஆற்றினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் ரங்கராஜ், துணைச் செயலாளர் சஞ்சய் குமார், தாமரைச்செல்வி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், ஆனந்தன், தொழிற்சங்க பொருளாளர் புரட்சி தீபம் லோகநாதன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் சுரேஷ், இளைஞரணி செயலாளர் சரவணகுமார், சமூக வலைதள அணிச் செயலாளர் கிருஷ்ணராஜ், மகளிர் அணி செயலாளர் ஜானகி சத்தியசீலன், நெசவாளர் அணி செயலாளர்  சிவகுமார், வர்த்தக அணி செயலாளர் லட்சுமணன், தொண்டரணி செயலாளர் சாதிக் பாஷா, மாணவர் அணி செயலாளர் கண்ணன், ஒன்றிய கழகச் செயலாளர் சரவணகுமார், கருங்கல்பாளையம் பகுதி கழக செயலாளர் சுசி ஆறுமுகம்,  அக்ரஹாரம் பகுதி கழகச் செயலாளர் பெருமாள், சம்பத் நகர் பகுதி கழகச் செயலாளர் வி சி சரவணன், வீரபஞ்சத்திரம் பகுதி கழக செயலாளர் சிலம்பரசன், திண்டல் பகுதி கழகச் செயலாளர் மணிகண்டன், காசிபாளையம் பகுதிகழகச் செயலாளர் முருகேசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares