கோவையில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சூடு

Loading

கோவையில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்த கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானதி சீனிவாசன், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. பெயரளவுக்கு ஒரு வழக்கு பதிவு செய்கிறார்களே தவிர வேறு ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் கூறியுள்ளார். தற்போது தன்னுடைய ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக முதல்வர் உணர்கிறார் என்றால் அதற்கு மூலக் காரணம் யார் இதை ஆரம்பித்தவர்கள் யார் திமுக அமைச்சர்கள், தலைவர்கள் தான் வட மாநிலத்தவர்களுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தார்கள். இந்தி தொழிலாளர்களால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பது போன்ற வெறுப்பு பிரச்சாரங்களை செய்தவர்களை எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு தற்போது ஆட்சிக்கு அச்சுறுத்தல் வந்துவிட்டது எனப் பேசினார்கள் இதை தொடங்கியவர்கள் நீங்கள் தான். அதற்கான நடவடிக்கையை நீங்கள் தான் எடுக்க வேண்டும். இன்று வட மாநில தொழிலாளர்களைச் சார்ந்து தான் தொழில்துறை இயங்கி வருகிறது. ஏற்கனவே இந்த அரசு கோவையை புறக்கணித்து வருகிறது. அதனால் தான் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது. எந்தவொரு கட்சியிலிருந்தும் சிலர் விலகுவதும் சிலர் சேர்வதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. எங்கள் கட்சியிலும் பிற கட்சிகளைச் சேர்ந்த பலர் இணைகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் காரணங்கள், ஆசைகள் இருக்கும். அவ்வாறு வெளியேறுகிறவர்கள் தலைமையைப் பற்றி தவறாக கூறுவார்கள். இதனால் பாஜகவுக்கு எந்தவொரு பாதிப்பும் கிடையாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக வளர்ந்து வருகிறது. சிராக் பஸ்வான் பாஜகவின் பீ டீமாக செயல்படுகிறார் என்கிற திமுக எம்.பி. ஆ.ராசாவின் கருத்துக்கு “தேசிய அரசியலுக்கு வருவதைப் பற்றி பேசுகிறீர்கள், உங்களுக்கு தேசிய ஒருமைப்பாட்டின் மீது தேசியத்தின் மீது நம்பிக்கை உள்ளதா.  தேசிய அரசியலுக்கு வந்தால் இது போன்ற பல டீம்களை பார்க்க வேண்டி இருக்கும்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares

Leave a Reply