ரூ.6.06 இலட்சம் மதிப்பில் மானிய கடன் பெறுவதற்கான ஆணைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.6.06 இலட்சம் மதிப்பீட்டில் மானிய கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பாக வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ஊரக பகுதியில் உள்ள தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் கடம்பத்தூர்,சோழவரம்,கும்மிடிப் பூண்டி,மீஞ்சூர் ஆகிய 4 ஒன்றியங்களில் உள்ள 198 ஊராட்சிகளில் இணை மானிய திட்டம் செயல்படுத்துவதைத் தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு ரூ.6.06 இலட்சம் மதிப்பீட்டில் மானியக்கடன் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.இதில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் (பொ) கே.முரளி,தொழில் நிதி செயல் அலுவலர் கே.மகேஸ்வரதேவன்,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எஸ்.அருள்ராஜா,பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.