51ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது

Loading

சென்னை அயனாவரத்தில் உள்ள ஐ.சி.எப் சில்வர் ஜூப்லி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் 51ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.மாணவர்கள் மைதானத்தை வலம் வந்து தீப ஜோதியை ஏற்றி சிறப்பு அழைப்பாளர்கள் வண்ண பலூன்களை பறக்கவிட்டும் விழா தொடங்கியது.இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த செஸ் கிரான்ட் மாஸ்டர் ஆர்.ஆர் லக்ஸ்மன் முன்னிலைவகித்தும் பள்ளியின் தலைவர் ஸ்ரீ மதுசூதன ராவ்,பள்ளியின்செயலாளர்பி.ஆர்.விஸ்வநாதன்,பள்ளியின் தாளாளர் விஜயபாஸ்கர்,தலைமை ஆசிரியை விதுல்லதா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் பங்குகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கி விழாவை சிறப்பித்தனர். இவ்விழாவில் மாணவர்கள் சிலம்பம் பரதநாட்டியம் யோகா போன்ற திறைமகளை வெளிபடுத்தினர்.இதில் பெற்றோர்களும் நடனமாடி அசத்தினர்.மாணவர்கள் காந்தி,நேரு வல்லபாய் பொன்ற வேடம் அணிந்து அசத்தினர்.விழாவின் முடிவில் மாணவர்களுக்கு கோப்பைகள்,சான்றிதழ்கள் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply