மாண்டோஸ் புயலினை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள்

Loading

திருவள்ளுர் மாவட்டத்தை பொறுத்தவரை சென்னைக்கு அருகாமையில் உள்ள மாவட்டமாக உள்ளது. மாண்டோஸ் புயலை எதிர்கொள்;ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்குவதற்காக இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த மாண்டோஸ் புயலினால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்திற்கு நாளை, நாளை மறுநாள் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டுள்ளது.
நம் திருவள்ளுர் மாவட்டத்தில் 8 மிகவும் அதிகமாக பாதி;ப்பு ஏற்படக்கூடிய பகுதிகளும், 39 அதிகளவில் பாதிப்பு ஏற்படும் பகுதிகளும், 44 மிதமாக பாதி;ப்பு ஏற்படக்கூடிய பகுதிகளும், 42 குறைவாக பாதி;ப்பு ஏற்படக்கூடிய பகுதிகளும் என மொத்தம் 133 மழையால் பாதிப்படையக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு மேற்படி பகுதிகளுக்கு பல்வேறு துறைகள் அடங்கிய 64 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, பூண்டி ஆகிய நீர்த்தேக்கங்களில் 72 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தற்பொழுது நீர் தேங்கியுள்ளது. அத்தகைய நீர்க்தேக்கங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், மாண்டோஸ் புயலினால் நாளையிலிருந்து தரைக்காற்று வீசப்படும் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளாக என்னென்ன மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.அந்த அறிவுரைகளையேற்று தகுந்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் திருவள்ளுர் மாவட்டத்தை பொறுத்தவரை முக்கியமாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு வட்டங்களும் கடலோர வட்டங்களாக உள்ளது. இந்த கடலோர வட்டங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று நேற்றையலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது திருவள்ளுர் மாவட்டத்தில் பல நாட்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பவர்கள் என்பது கிடையாது. நாள்தோறும் மீன்பிடிக்க சென்று வருபவர்கள் மட்டுமே உள்ளனர். அதனடிப்படையில், அனைத்து மீனவ கிராமங்களுக்கும் புயல் குறித்து அதிகாரிகள் நேரடியாக சென்று எடுத்துரைத்ததன் அடிப்படையில் யாரும் கடலுக்கும் செல்லவில்லை. அதுமட்டுமின்றி ஏரியில மீன்பிடிப்பு செய்வோர்களிடமும் எடுத்துரைத்து, அவர்களும் ஏரிகளுக்கு மீன்பிடிக்க   செல்லவில்லை.
 மேலும், பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையங்களான வைரன்குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய இடங்களிலும் பல்நோக்கு பாதுகாப்பு மையங்களான திருப்பாலைவனம், ஆண்டார்மடம், பள்ளிப்பாளையம் எளாவூர் -1, எளாவூர் – 2 ஆகிய ஐந்து இடங்களிலிம் 660 தற்காலிக தங்குமிடங்களும்  அமைக்கப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக கால்நடைகளை காப்பாற்ற 64 தங்குமிடம் மற்றும் 144 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.  மேலும், மாண்டோஸ் புயல் குறித்து தகவல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் தகவல்கள் இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும். அதுமட்டுமின்றி அரசு சார்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் மேற்கொள்ளப்படும் புயல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
 மேலும், நம் திருவள்ளுர் மாவட்டத்தில் பொது மக்கள் பெருமழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கி வருகின்றது. மேலும், கட்டுப்பாட்டு அறை 044-27664177,   044-27666746-க்கும், வாட்ஸ் ஆப் எண். 9444317862 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அதுமட்டுமின்றி, மணல் மூட்டைகள், சவுக்கு மரக்கம்பங்கள், ஜே.சி.பி. இயநத்ரங்கள், மின் அறுவை இரம்பங்கள், கயிறுகள், படகுகள், அதிநவீன நீர் உறிஞ்சும் இயந்திரங்கள், ஐனரேட்டர், தண்ணீர் லாரிகள், நீர் இறைக்கும் பம்புகள், தார்ப்பாய்கள், டார்ச் லைட்டுகள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், ஆகியவை தயாராக உள்ளது என மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.இச்செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன் மற்றும் வளர்ச்சி கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை  திட்ட அலுவலருமான  செ.ஆ.ரிஷப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *