இந்தியா – யுஎஸ்ஏ – க்கு இடையிலான ஒத்துழைப்பு.
உலகளாவிய கல்வி மற்றும் சர்வதேச கூட்டாண்மைகள்
இந்தியா – யுஎஸ்ஏ – க்கு இடையிலான ஒத்துழைப்பு.தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு உயர்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சியாட்டில் பல்கலைக்கழகம் கையொப்பமிடுகிறதுசியாட்டில் பல்கலைக்கழகத்திலிருந்து சென்னைக்கு வருகை தந்திருக்கும் அதன் உயர் நிர்வாக மற்றும் தலைமைத்துவ குழுவினர், தமிழகத்தில் இரு முதன்மையான கல்வி நிறுவனங்களாகப் புகழ்பெற்றிருக்கும் லொயோலா கல்லூரி மற்றும் விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இத்தகைய கூட்டுவகிப்பு செயல்பாட்டிற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MOU) மேற்கொண்டிருக்கிறது. புரொஃபசர் எடுவர்டோ M. பெனால்வர்
சியாட்டில் பல்கலைக்கழகம் என்பது, பசிபிக் நார்த்வெஸ்ட் பிராந்தியத்தில் சியாட்டில் பகுதியில் இயங்கி வரும் ஒரு மிகப்பெரிய தனியார்துறை பல்கலைக்கழகமாகும். செவிலியர் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சட்டம் மற்றும் பிசினஸ் உட்பட, ஆறு கல்லூரிகளை சியாட்டில் பல்கலை கொண்டிருக்கிறது. அதிவேக வளர்ச்சி கண்டு வரும் எமது கல்வித் திட்டங்களாக கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் ஆகியவை திகழ்கின்றன. உங்களது அனுபவத்திலிருந்து எமது மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். அதைப்போலவே, உங்களது மாணவர்களும், கல்வியாளர்களும் எமது அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்பது நிச்சயம்; ஆகவே, தனிநபர் அளவில் உறவுகளை உருவாக்குவதற்கு கல்வி நிறுவனங்கள் அளவில் உறவுகளை நாம் கட்டமைப்பது அவசியமாக இருக்கிறது. இதன் வழியாகவே உலகளாவிய சவால்களை திறம்பட கையாளக்கூடிய தலைவர்களை கல்வியின் மூலம் நம்மால் உருவாக்க முடியும்.” என்று கூறினார்.