பண்ருட்டி பைத்துல்மால் அலுவலகம் திறப்பு
பண்ருட்டி ஜூன். 03- கடலூர்r மாவட்டம் பண்ருட்டி நகரத்தில் பண்ருட்டி பைத்துல்மால் சார்பில் ஏழை எளியவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மக்களுக்கு தொழில் கடன் கல்விக் கடன் மருத்துவம் போன்ற மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற இந்த பைத்துல்மால் அலுவலக ஹஜ்ரத் நூர் முகமது ஷா வளாகத்தில். பைத்துல்மால் நிறுவனர் தொழிலதிபர் ஜாகிர் உசேன். அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பைத்துல்மால் தலைவர் இதயத்துல்லா. பொருளாளர் மொய்தீன். கான் அவுலியா நகர் ஜமாஅத் தலைவர் அப்துல் கலாம். தமிழ்நாடு புதுச்சேரி வக்ஃபு சொத்துகள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குழு மாநில செயலாளர் ஷேக் நூறுதீன். நூர் முகமது. ஷா தர்கா தலைவர் அன்சர் பாஷா. முகமது காசிம். நவாஸ்கான். ஜுபைர் அலி. ஜாகிர் உசேன். சித்திக். மற்றும் ஜமாத்தார்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.