மாரண்டஅள்ளியல் சின்னாறு உபவடிவ நிலப்பகுதி இடைமுக பணிமனை விவசாயிகள் கருத்தரங்கு.
பாலக்கோடு.ஜூன்.23-
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறை சார்பில் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் நிலை 3, சின்னாறு உபவடிவ நிலப்பகுதி இடைமுக பணிமனை விவசாயிகளுக்கான கருத்தரங்க கூட்டம் வேளாண்மை துணை இயக்குநர் மோகன்தாஸ் சௌமியன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதிகள் விவசாயத்தை பிரதானமாக கொண்ட பகுதியாகும், இப்பகுதியில் போதிய நீர் ஆதாரம் இல்லாததால் விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்கு விளைக்கப்படும் தக்காளி, வெண்டை, கத்தரி, வாழை,தேங்காய், மாம்பழம் மற்றும் சிறு தானியங்களான கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம், சாமை போன்றவைகளை விற்கும் போது போதிய விலை கிடைக்காமல் குறைந்த விலையில் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில்
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி பதப்படுத்தி விற்பனை செய்வதால் கூடுதல் வருமானம் ஏற்படும் இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகும் என இந்த கருத்தரங்கில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான கண்காட்சி அமைத்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், வேளாண்மை இனை இயக்குநர் வசந்த ரேகா, வேளாண்மை துனை இயக்குநர் கனேசன் , திட்ட ஒருங்கினைப்பாளர் விஜயகுமார், வேளாண்மை அலுவலர் மணிராஜன், வேளாண்மை உதவி இயக்குநர் அருள்மணி, உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.