அதிமுக  பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்க வேண்டும் ஜெயகுமார் திடீர் அழைப்பு இன்று நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார்

Loading

அதிமுக  பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்க வேண்டும்
ஜெயகுமார் திடீர் அழைப்பு இன்று நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து,மாநிலத்திலிருந்து ஒற்றை தலைமைதான் கழகத்திற்குத் தேவை என்று தீர்மானித்து அந்த ஒற்றை தலைமைக்கு எடப்பாடியார் தலைமையேற்ற வேண்டும் என்ற அந்த கருத்தை எடப்பாடியார் இடத்தில் ஒவ்வொரு மாவட்டகழத்தை சேர்ந்தவர்களும் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கடந்த 8 நாட்களாக எடப்பாடியாரை சந்தித்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துவருகிறார்கள்.இன்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன்  தலைமையில் 75 மாவட்டச் செயலாளர்கள்,25 மண்டல செயலாளர்கள் அனைவரும் எடப்பாடியாரை சந்தித்து ஒற்றை தலைமைதான் வேண்டும் அந்த ஒற்றை தலைமைக்கு  நீங்கதான் தலைமை தாங்கவேண்டும் என்ற அந்த தீர்மானத்தை ,இயற்றி எடப்பாடியார் இடத்தில் அளித்துள்ளார்கள்.
அதிமுக என்பது ஒரு ஜனநாயகம் மலர்ந்த ஒரு மாபெறும் இயக்கம். இங்கு எந்த அராஜக போக்கும் கிடையாது.இவ்வளவு நாட்களாகப் பார்த்துவருகிறீர்கள்.எவ்வளவு ஆர்வத்தோடு, எழுச்சியோடு தங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கவேண்டும் என்ற வகையிலே, எடப்பாடியாரை சந்திக்கிறார்கள் என்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கிறீர்கள். ஒபிஎஸ் தவறுக்கு மேல் தவறு செய்துவருகிறார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஒரு படத்தில் ஒரு பாடலை பாடுவார்.பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை என்று பாடியிருப்பார். அந்த வகையில் ஒரு தவறான பாதையை நோக்கி ஓபிஎஸ்  சென்று கொண்டிருக்கிறார் என்று மனவருத்தோடு தெரிவிக்கிறேன். பொதுக்குழுவில் அவரும் கலந்துகொள்ளவேண்டும்.உச்சபட்ட அதிகாரம் கொண்ட பொதுக்குழு எடுக்கும் முடிவுக்கு எல்லோரும் கட்டுப்பட்டாக வேண்டும். அவர் உட்பட எல்லோரும் கட்டுபட்டாக வேண்டும் பொதுக்குழுவிற்கு இருவரும் சேர்ந்துதானே கடிதம் அனுப்பியுள்ளார்கள்.அவர் (ஒபிஎஸ் ) கலந்துகொள்ளக் கூடாது என்று சொல்லவில்லை.அவர் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த விருப்பம். கலந்துகொள்வார்
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *