மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பெயர் கையெழுத்து இயக்கத்திற்கு எம்எல்ஏக்கள் ஆதரவு
சென்னை, மே- 12
மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அஞ்சு ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயர் சூட்ட வலியுறுத்தி நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு காங்கிரஸ் சட்டமன்றக்கட்சி தலைவர் செல்வபெருந்தகை ஆதரவு தெரிவித்துள்ளார்,
வடசென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றிற்கு அஞ்சு ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயர் சூட்ட வலியுறுத்தி, அந்த பகுதியில் உள்ள சமூக நல அமைப்புகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர், ராயபுரம் ரவுண்டப், ஒருங்கிணைப்பில் நேதாஜி சமூகசேவை இயக்கம், அறிஞர் அண்ணா நடப்போர் நலச்சங்கம், வடசென்னை தமிழ்இளைஞர் கழகம், அகில இந்திய மீனவர் சங்கம், இந்திய மீனவர் சங்கம் உள்ளிட்ட 22 அமைப்புகளை சேர்ந்தவர்கள் அதனை முன்னின்று நடத்தி வருகின்றனர்,
இதன் ஒரு பகுதியாக அரசினர் தோட்டத்தில் உள்ள வடசென்னை சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகள் சட்டமன்ற விடுதியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்றக்கட்சி தலைவர் ஜவாஹில்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் , திருவாரூர் திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோரை சந்தித்து கையெழுத்து இயக்கம் குறித்து விளக்கினர், அஞ்சு ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் சட்டமன்றக்கட்சித்தலைவர் செல்வபெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹில்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திருவாரூர் பூண்டி கலைவாணன் ஆகியோர் கையெழுத்திட்டனர், இதற்கான ஏற்பாடுகளை இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் எம்.டி. தயாளன் , அறிஞர் அண்ணா நடப்போர் நலசங்கத்தின் செயலாளர் குணசேகரன், நேதாஜி சமூக சேவை இயக்கத்தின் செயலாளர் வன்னியராஜன் ஆகியோர் செய்திருந்தனர்,