டீச்சர் தன்னை அடிப்பதாக காவல் நிலையத்திற்கு தனியே சென்று 3-ம் வகுப்பு சிறுவன் புகார்

Loading

டீச்சர் தன்னை அடிப்பதாக காவல் நிலையத்திற்கு தனியே சென்று 3-ம் வகுப்பு சிறுவன் புகார் அளித்து பள்ளிக்கூடத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் ஏராளமானோர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அணில் என்ற மாணவர் 3-ம் வகுப்பு மாணவர் படித்து வந்துள்ளார்.அந்த மாணவர் சரியாக படிக்காமலும் ,ஹோம் ஒர்க் செய்யாமலும் வந்ததால் அந்த பள்ளி டீச்சர்கள் அவனை அடித்துள்ளார்கள் .இதனால் அந்த மாணவன் இது பற்றி தன் வீட்டில் கூறியதற்கு அவர்கள் அவனை ஒழுங்காக படிக்க சொன்னார்கள்

இந்த நிலையில், 3-ம் வகுப்பு மாணவர் அணிலை மீண்டும் அவரின் ஆசியர்களான சனி, வெங்கட் ஆகியோர் அடித்துள்ளனர் .இதனால் அந்த மாணவன் நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியாக சென்றார் .பிறகு அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் டீச்சர்கள் தன்னை அடிப்பதாக புகார் கூறினார் .அவரின் புகாரை கேட்ட மகபூர் மாவட்டம் பயராம் நகர காவல்நிலைய அதிகாரி ,பள்ளிக்கே சென்று மாணவர்களை அடிக்காமல் பாடம் நடத்துமாறு டீச்சர்களுக்கு அறிவுரை கூறினார் . ,மேலும் அந்த மாணவரிமும் ஒழுங்காக படிக்குமாறும் அறிவுரை கூறினார் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *