கன்னியாகுமரி மாவட்ட நகர் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை சுமுகமாக நடத்தி முடித்த மாவட்ட அரசு … பாராட்டுக்கள் தெரிவிக்கும் பொது மக்கள்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- தமிழகத்தில் நகர் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று கிட்டத்தட்ட 6 வருடங்கள் கழிந்து விட்டன. இன்னிலையில் சென்ற மாதம் தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தியதி அறிவிக்கப்பட்டது. 19/02/2022 வாக்கெடுப்புக்கும் 22/02/2022வாக்கெண்ணிக்கையும் நடைபெறும் என அறிவித்தது. அதன் படி தேர்தல் நடை பெற்று முடிந்தன. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், மதிமுக உட்பட அனைத்து கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்று முடிந்தன.

அதன் பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் நகர் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருமான அரவிந்த் IAS தலைமையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி, கன்னியாகுமரி நகராட்சி, குளச்சல் நகராட்சி, குழித்துறை நகராட்சி உள்பட அனைத்து நகராட்சிகளில் ஆணையர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் மூலம் தேர்தல் பணியினை பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் அமைதியான முறையில் நடத்தப்பட்டன.

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் IPS தலைமையில் காவல் குழுவினர் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பொது மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வாக்களிப்பும் நடை பெற்றது. குறிப்பாக நீண்ட நாட்களுக்கு பிறகு நடக்கும் தேர்தல் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி அந்தஸ்து பெற்ற பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் நாகர்கோவில் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர் வாக்கெடுப்பு நடத்துவதில் கடும் சவாலாகவே அமைந்துள்ளது.

இருப்பினும் நாகர்கோவில் ஆணையர் மற்றும் தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் IAS முழு நேர மேற்பார்வையில் மாநகராட்சி தேர்தலில் அறிவித்த நாளில் இருந்து எவ்வித குழப்பங்களோ தேர்தல் விதி மீறல்களோ நடை பெறாமல் இருக்க முழு கவனத்துடன் தேர்தலை மிக சிறப்பான முறையில் மாநகராட்சி தேர்தலை நடத்தி முடித்தார். மிக சிறப்பான முறையிலும் சுமூகமாகவும் தேர்தலை நடத்தி முடித்த மாவட்ட நிர்வாகத்தை பொது மக்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *