‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘

Loading

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட
புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல்
ஆணையாளர் சங்கர் ஜிவால், அவர்களின் ‘‘புகையிலை பொருட்கள்
ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco
Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில்,
கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள்
ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி
ஆணையாளர்கள் மேற்பார்வையில்.

காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான
தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக
கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது
செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான
தனிப்படையினர் கடந்த 20.02.2022 முதல் 26.02.2022 வரையிலான
7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப்
பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக
13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 514 கிலோ 110 கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை
பாக்கெட்டுகள், 230 கிராம் மாவா மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக, கடந்த 25.02.2022 அன்று J-8 நீலாங்கரை காவல்
நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய
தகவலின்பேரில், காவல் குழுவினர் நீலாங்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில்
சோதனை மேற்கொண்டு குட்கா புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த
சசிகுமார், வ/34, த/பெ.நடராஜன், எண்.54, 2வது மெயின் ரோடு, கோபிநாத்
கார்டன், வெட்டுவாங்கேணி, சென்னை என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 51 கிலோ 450 கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை
பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், C-3 ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினருக்கு நேற்று (26.02.2022) காலை கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல்
குழுவினர், வால்டாக்ஸ் சாலை மற்றும் அம்மன் கோயில் தெரு சந்திப்பில் வாகனத்
தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் குட்கா புகையிலைப்
பாக்கெட்டுகளை மறைத்து எடுத்து வந்த மனோஜ் அகர்வால், வ/43, த/பெ.ராம்

உத்தர், எண்.15/2, வெங்கடே மேஸ்திரி தெரு, சௌகார்பேட்டை, சென்னை மற்றும்
இவரது மகன் ரோஹித் அகர்வால், வ/21, த/பெ. மனோஜ் அகர்வால், ஆகிய
இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த
மற்றும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 460 கிலோ எடை கொண்ட ஹான்ஸ்,
ஸ்வாகத், விமல், எம்.டி.எம். உள்ளிட்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 1
இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர
கண்காணிப்பில் ஈடுபடுவதால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்
பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும்
விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்
என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்,
அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *