காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் அமுதப்பா ஹோட்டலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத் துறை RTI ஆலோசனைக் கூட்டம்

Loading

காஞ்சி மாவட்டம் குன்றத்தூர் அமுதப்பா ஹோட்டலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத் துறை RTI ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர் மாநிலத் தலைவர் C.கனகராஜ் கலந்துகொண்டு இரும்பு மங்கை அன்னை இந்திரா காந்தி137வது நினைவு நாளை முன்னிட்டு அவரை நினைவு கூறும் வகையில் அவரின் தியாகங்களைப் பற்றி நிர்வாகிகளுக்கு எடுத்துக்கூறினார் தொடர்ந்து பேசிய அவர் சீமானை நித்தியானந்தாவோடு ஒப்பிட்டுப் பேசினார் அவர் கூறுகையில் நித்தியானந்தா ஆன்மீகத்தை முன்னிறுத்தி ஆசிரமத்தை நடத்துபவர் .சீமான் தமிழ் தேசியத்தை வைத்து அரசியல் செய்பவர், நித்தியானந்தா சிவனின் பிள்ளை என்று கூறிக் கொள்வார் .சீமான் பிரபாகரனின் பிள்ளை என்று கூறிக் கொள்வார். நித்தியானந்தா வெளிநாட்டு பக்தர்களிடம் நிதி பெறுகிறார். சீமான் வெளிநாட்டு தமிழர்களிடம் நிதி பெறுகிறார். நித்தியானந்தாவிடம் சகோதரி ரஞ்சிதா, சீமானிடம் நடிகை விஜயலட்சுமி, நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் உள்ளது அதனால் தலைமறைவாக உள்ளார். சீமான் மீது பல புகார்கள் உள்ளது ஆனால் கைது நடவடிக்கை இல்லை.
நித்தியானந்தா கைலாச நாட்டு தீவைப் பற்றி பேசுவார் ,சீமான் இலங்கைத் தீவைப் பற்றி பேசுவார் வேற்றுமை என்னவென்றால் ஒருவர் அரசியலில் பொய் இன்னொருவர் ஆன்மீகத்தில் பொய் என்று இருவரையும் ஒப்பிட்டுப் பேசினார். இறுதியில் பேசிய அவர் காஞ்சிபுரம் மாவட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டத் துறை சார்பாக சமூகப் பணியில் ஈடுபட்டு கட்சியை வளர்த்தெடுக்க ஆலோசனை கூறினார் இக்கூட்டத்தில் காஞ்சி மாவட்ட தலைவர் ராபர்ட், துணைத் தலைவர் கார்த்திகேயன். மருது, துறை. கௌதமன். ராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *