பாப்பாரப்பட்டி அருகே. கணவன் மனைவி பிரச்சனையால் பெண் விஷம் குடித்து உயிரிழப்பு
பாலக்கோடு.ஆக.2-
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த சிட்லகாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மனைவி தமிழரசி 27 வயது இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை11 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சதீஷ்குமார் அதே பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.சில தினங்களாக சதீஷ்குமார் நடத்தையில் அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தமிழரசி க்கும் கணவர் சதீஷ்குமார் க்கும் அடிக்கடி வீட்டில் தகராறு இருந்து வந்துள்ளது. தமிழரசி கடந்த 28 ஆம் தேதி மாலை வீட்டில் விஷ மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். வீட்டில் உள்ளவர்கள் தமிழ்ரசியே உடனே தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த தமிழரசி நேற்று மாலை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.