திருவள்ளூரில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக முக்கிய வீதிகளில் துணை ராணுவப் படை வீரர்கள் அணிவகுப்பு :

Loading

திருவள்ளுர் மார்ச் 02 : நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படை வீரர்கள் முதல் கட்டமாக 150 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும்,100 சதவிகித வாக்கை செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் நகரின் மையப் பகுதியில் துணை ராணுவப் படை வீரர்கள் அணிவுகுப்பில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் காமராஜர் சிலையிலிருந்து துப்பாக்கி ஏந்திய ராணுவப் படை வீரர்கள் ரயில் நிலையம் வரை அணிவகுத்து சென்றனர். திருவள்ளூர் மாவட்ட அதிரடிப்படை டி.எஸ்.பி., திருவள்ளூர் தாலுக்கா காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்ட காவலர்களும் இந்த அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *