பூவிருந்தவல்லி ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் : திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு :

Loading

திருவள்ளூர் ஜூலை 06 : திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகளை திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்க்கொண்டார்.

அப்பொழுது காட்டுப்பாக்கம் ஊராட்சி டாக்டர் கலைஞர் கருனாநிதி நகர் பகுதியில் தலா ரூ. 2.10 இலட்சம் மதிப்பீட்டில் 2020-21 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட 15 பசுமை வீடுகளையும்,சென்னீர்குப்பம் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் சுகாதர நாப்கின் பொருட்களையும்,பாரிவாக்கம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் ரூ. 5.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள சமுதாய கழிவறையை ஆய்வு மேற்கொண்டு, மேற்படி வளாகத்தை அப்பகுதி மக்களை முறையாக பயன்படுத்துமாறு அறிவுறித்தினார்.

வராதராஜாபுரம் ஊராட்சியில் ரூ. 60 இலட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட சமுதாய உயர் எரிவாயு நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு, அதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் ஊராட்சி பயன்பட்டிற்கு பயன்படுத்தவும்,குத்தம்பாக்கம் ஊராட்சியில், சமத்துவபுரம் பகுதியில் உள்ள பழுதடைந்த வீடுகளை பார்வையிட்டு, அதனை உடனடியாக சரி செய்ய தேவையான மதிப்பீடுகளை தயார் செய்யவும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 11.75 இலட்சம் மதிப்பீட்டில் (2019-20) ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நாற்றங்கால் பணிகளையும்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக் தயாரிக்கப்பட்ட காகித கோப்பை, துணிப்பைகள், கூடைகள் போன்றவற்றையும்,மேல்மணம்பேடு ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ. 73.78 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் தனி நபர் இல்ல குடிநீர் இணைப்புகளையும்,திருமணம் ஊராட்சில் 2020-21 ஆம் ஆண்டு ஊற்றுக்குழிமேடு பழங்குடியினர் பகுதியில் தலா ரூ. 3 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளையும் ஆய்வு மேற்கொண்ட அனைத்து திட்ட பணிகளையும் உரிய தரத்துடன் விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பட்டிற்க்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறித்தினார்

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க. லோகநாயகி, செயற்பொறியாளர் ராஜவேல், பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *