ஈரோடு காங்கிரசார் “கொரோனோ”நிவாரண உதவி
ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு குரோனோ நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர்,
திருமகன் ஈவெரா எம் எல் ஏ., ,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஈரோடு மாவட்ட கிளை சார்பாக ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையால் வேலை இழந்த ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் . முத்துராமசாமி ஏற்பாடு செய்தார், ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரி மாதேஷ், திமுக ஈரோடு மாவட்ட பொருளாளர் . பழனிச்சாமி , தொடக்கப்பள்ளி ஆசிரியர் நிர்வாகிகள், காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.