உலக தமிழ் பண்பாட்டு சங்கத்தின் தமிழ் தமிழர் மாநாடு
உலக தமிழ் பண்பாட்டு சங்கத்தின் தமிழ் தமிழர் மாநாடு
சென்னை கலைவாணர் அரங்கத்தில். அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின்,நிறுவனரும் செயலாளருமான கவிஞர் .பாக்கியலட்சுமி ,தலைவர்.பாவரசு.பாரதிசுகுமாரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர். துளசி.இராஜேந்திரன் , து.தலைவர்.கவிஞர் .மரிய டக்ளஸ்,தமிழ்மகன். இளங்கோ,பொருளாளர்.இரா.பத்மநாபன் இளைஞரணி தலைவர் அருண் தாஸ் மணி ஆகியோர் கலந்து கொண்ட இதில்,தலைமை விருந்தினராக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டார்.தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். ஆயிரம் பேருக்கும் மேலாக கலந்து கொண்ட இந்னிகழ்வில்
விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராமிய,தமிழ் கலைஞர்கள் 400 க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.விழாவில் ஒரு பகுதியாக நிறுவனர் கவிஞர் .இரா.பாக்கியலட்சுமி வெங்கடேசன் எழுதிய கீறல்களின் கீற்று என்னும் நூலையும், சங்கத்தின் தொகுப்பு நூலாக நூற்றுக்கும் மேலான கவிஞர்கள் இடம் பெற்ற காவிய சிறகுகள் என்ற நூலையும் முன்னால் காவல் துறை தலைவரும்,எழுத்தாளருமான திலகவதி.ஐ.பி.எஸ் அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.தொடர்ந்து விழாவில் கிராமிய புதல்வன் அகாடமி மாணவ,மாணவிகள் உட்பட பல்வேறு கலைஞர்களின் கிராமிய நடனங்கள்,கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவில் ஒரு பகுதியாக தமிழ் மொழி ஆர்வலர்களின் கவியரங்கம்,பாராட்டரங்கம்,கருத்தரங்கம் என பன்முக திருவிழாவாக மாநாடு நடைபெற்றது.வி.ஜி.பி.உலக தமிழ் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோஷம் வாழ்த்துரை வழங்கினார். அமைச்சர்.க.பாண்டியராஜன் அவர்களால் கல்வியாளர்கள், கவிஞர்கள்,கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டத்து..மற்றும் சாண்டி மாஸ்டர், திரைப்பட இயக்குநரும் நடிகருமான சின்னசாமி மௌனகுரு போன்றவர்கள் கலந்து கொண்டனர் . சாண்டி மாஸ்டர் அவர்களுக்கு நடன கலை வித்தகர் என்ற விருதும், திரைப்பட தயாரிப்பாளரும் நடிக்கருமான சின்னசாமி மௌனகுரு அவர்களுக்கு சாதனைச் சுடர் என்ற விருதும், தலைவர் பாவரசு.பாரதி சுகுமாரன் அவர்களுக்கு மாக்கவி என்ற விருதும் , து.தலைவர் கவிஞர் .மரிய டக்ளஸ் அவர்களுக்கு சிறந்த படைபூக்க பேரொளி என்ற விருதும், தமிழ்மகன்.ப.இளங்கோ அவர்களுக்கு தமிழ்ப்பண்பாட்டுச் சிகரம் என்ற விருதும், பா.நமச்சிவாயம் அவர்களுக்கு கலைச்கிகரம் என்ற விருதும் வழங்கப்பட்டது. உலக தமிழ் பண்பாட்டு சங்கத்தின் நிர்வாகிகள் நமச்சிவாயம், எஸ்.எல்.வெங்கடேசன், சிந்து ஸ்ரீ மல்லி, ஸ்டீபன் செல்வராஜ்,செல்லத்தாய், கங்கா ஜெகநாதன் ,செல்லப்பா,க.இராசசேகரன்,விஜய் ஜெனிபா ,ஜென்னி வினோதா உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் நிறுவனர் கவிஞர்.பாக்கியலட்சுமி அவர்களின் எந்த சீரிய முயற்சியை கண்டு அனைவரும் பாராட்டினார்கள். அவர் பேசும்போது தன்னுடைய தனி முயற்சி என்று இல்லை. நிர்வாகத்தில் உள்ள பலரின் ஒத்துழைப்பும் காரணமென்று பேசி அனைவரையும் இயல்பால் ஈர்த்தார்.