70வயதுமூத்ததம்பதியருக்குசிறப்புமுத்துசாமிபங்கேற்பு

Loading

ஈரோடு
ஈரோட்டில் 70 வயது கடந்த மூத்த தம்பதியருக்கு திருக்கோயில் சார்பில் சிறப்பு: அமைச்சர் முத்துசாமி பங்கேற்பு!
ஈரோடு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஈரோடு ஈஸ்வரன் கோயில் மற்றும் சோளீஸ்வரன் கோயில்களில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு மூத்த குடிமக்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் முன்னிலை வகித்தனர். கோயிலுக்கு வந்திருந்த மூத்த தம்பதியரின் வாழ்நாள் சேவையைப் போற்றும் வகையிலும் அவர்களின் ஆன்மீக வழிபாட்டிற்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இந்த கௌரவிப்பு நிகழ்வு அமைந்தது. அமைச்சரின் இந்த வருகை மற்றும் மூத்த குடிமக்களுக்கான இந்த சிறப்பு நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
0Shares