சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம்

Loading

 

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆய்வு கூட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருட்கள் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு, மணல் குவாரிகள், தீயணைப்பு துறை ஆகியவை தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகனந்த சுக்லா,பொன்னேரி சார் ஆட்சியர் ரவிகுமார்,வருவாய் கோட்டாட்சியர் ரவிசந்திரன் (திருவள்ளூர்), துணை ஆணையாளர் பெரோஸ்கான் அப்துல்லா (ஆவடி), பாலாஜி (செங்குன்றம் சட்ட ஒழுங்கு),சங்கு (ஆவடி போக்குவரத்து), மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன்,உதவி ஆணையர் (கலால்) கணேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares