தேசிய அளவிலான சி.ஏ. மாணவர்கள் மாநாடு துவக்கம்

Loading

கோவை
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில் கோவையில் தேசிய அளவிலான சி.ஏ. மாணவர்கள் மாநாடு துவக்கப்பட்டது, இதில், 1000க்கும் அதிகமான் மாணவர்கள் பங்கேற்றனர். 
மத்திய அரசு, இந்திய பட்டயக் கணக்காளர்களை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டயக் கணக்காளர்களாக முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறதாக, சி.ஏ. ஜி. ராமசுவாமி தெரிவித்தார்.
சி.ஏ. மாணவர்கள் என்றழைக்கப்படும் பட்டயக் கணக்காளர் மாணவர்களுக்கான தேசிய அளவிலான மாநாட்டை இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனமான ஐ.சி.ஏ.ஐ கோவையில் 2 நாட்கள் நடத்துகின்றது.
அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு’ ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு ‘விதை’  எனும் தலைப்பில் இந்த மாநாடு கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
இதில் பசுமை மற்றும் நீர்மேலாண்மை அமைப்பான சிறுதுளி-யின் நிர்வாக அறங்காவலரும், பிரபல பிரிக்கால் நிறுவனத்தின் தலைவருமான வனிதா மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி.ஏ.ஜி. ராமசுவாமி, கௌரவ விருந்தினராக பங்கேற்று அவருடன் சேர்ந்து இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இவர்களுடன் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சி.ஏ.ஆர். சதீஷ்; சிகாசா-அமைப்பின் தலைவர் சி.ஏ. கே. முத்து குமார்; செயலாளர் சி.ஏ. தங்கவேல், மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் துணைத் தலைவர் சி.ஏ.சூர்வாஜித் எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் துவக்க விழாவில் பங்கேற்றனர்.
இந்த இரண்டு நாள் தேசிய மாநாட்டில் 1300 சி.ஏ. மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வில் பல தொழில்நுட்ப அமர்வுகள், ஊக்கமூட்டும் அமர்வுகள், கலாச்சார நிகழ்வுகள், சிறப்பு அமர்வுகள் மற்றும் நிறைவு விழா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த மாநாட்டின் துவக்க விழாவின் போது, இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி.ஏ.ஜி. ராமசுவாமி அவர்கள் பேசுகையில், இந்தியாவில் இன்று 4.25 லட்சம் பட்டயக் கணக்காளர்கள் உள்ளனர் என்றும், மேலும் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சி.ஏ.படித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கணக்கியல் தொழில் முக்கியமானது என்றும், சி.ஏ. படிக்கும் மாணவர்களுக்கு முன் பெரிய பொறுப்புகளும், மிக பெரிய வாய்ப்புகளும் காத்திருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். “உங்கள் வாய்ப்புகள் இந்தியாவில் மட்டுமே உள்ளது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். உங்கள் வாய்ப்புகள் பறந்துவிரிந்து உள்ளது,” என்று அவர் மாணவர்களிடம் கூறினார்.
இந்திய பட்டயக் கணக்காளர்களை உலகளாவிய பட்டயக் கணக்காளர்களாக மாற்றுவதற்கு இந்த அமைப்பு  முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறிய அவர்,  வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையிலான தலைமை நிதி அதிகாரிகள் இந்தியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர் என கூறினார். சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய் ஆகிய நாடுகளிலும் உள்ள அதிக எண்ணிக்கையிலான பட்டயக் கணக்காளர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என அவர் கூறினார்.
இந்திய அரசு, குறிப்பாக நமது பிரதமர் நரேந்திர மோடி, நமது  பட்டயக் கணக்காளர்களை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டயக் கணக்காளர்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என அவர் கூறினார்.
ஒருவர் நமது நாட்டில் சி.ஏ. பணியை முடிக்கும்போது, இங்கிலாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ள பிற நாடுகள் ஆகிய நாடுகளில் வெறும் 1 தேர்வை முடிப்பதன் மூலம் அங்கு சி.ஏ.வாக செயல்பட முடியும் என மாணவர்களுக்கு அவர் விளக்கினார்.
0Shares