லீ மெரிடியன்கிறிஸ்துமஸ்கேக் செர்மோனி நிகழ்ச்சி
![]()
இந்த நிகழ்வில், ஹோட்டலின் விருந்தினர்கள் மற்றும் ரோட்டரி கிளப்பில் இருந்து வந்த சிறப்பு அழைப்பாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு குறித்து லீ மெரிடியன் ஹோட்டலின் நிர்வாகச் செஃப், டொமினிக் சேவியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.. 2025 ம் ஆண்டு, கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்க்கும் விதமாக, நடைபெற்ற கேக் கலவை நிகழ்ச்சியில், 100 முதல் 120 கிலோ வரையிலான வால்நட்ஸ் மற்றும் உலர் பழங்களான பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, கருப்புத் திராட்சை, பேரீச்சம்பழம், ஆப்ரிகாட், செர்ரிப் பழம், கருப்பு நிற பிளாக்பெர்ரி, அத்திப்பழம், அக்ரூட் பருப்பு ஆகியவற்றை பயன்படுத்தி, இறக்குமதி செய்யப்பட்ட உயர்ரக மதுபானத்தில் கலக்கப்பட்டதாக கூறினார். இந்த கலவை கிட்டத்தட்ட 30 முதல் 40 நாட்கள் ஊறவைக்கப்பட்டு, பின்னர் பிளம் கேக்குகள் மற்றும் புட்டிங் கேக்குகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும், அவ்வாறு தயாரிக்கப்படும் கேக்குகள் ஹோட்டலில் தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் என்றும், வெளி வாடிக்கையாளர்களுக்கும் விற்பனைக்கு வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார், கடந்த ஆண்டு, இந்த ஹோட்டலில் 300 கிலோவுக்கும் அதிகமான கேக்குகள் தயாரிக்கப்பட்டதாகவும் இந்த ஆண்டு அதை விட கூடுதலாக தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

